புனித அந்தோனியார் வரலாறும் புதுமைகளும்

புனித அந்தோனியார் வரலாறும் புதுமைகளும்

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க இறைமக்களால் 'புதுமைகளின் புனிதர்' என்று போற்றப்படுபவர் புனித அந்தோனியார். இனம், மதம், மொழி கடந்து கோடிக்கணக்கான மக்களின் துயர்துடைக்கும் ஒரு உன்னத சக்தியாக அவர் விளங்குகிறார். போர்ச்சுகல் நாட்டில் பிறந்தாலும், இத்தாலியின் பதுவை (Padua) நகரில் மரித்ததால் இவர் 'பதுவைப் பதியர்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். 


  தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்,

1. பிறப்பும் இளமைக்காலத் துறவறமும்

புனித அந்தோனியார் 1195-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் மாநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் மார்ட்டின் - மேரி தம்பதியினர். இவருக்கு இட்ட இயற்பெயர் பெர்ணாண்டு மார்ட்டின்.

  • கல்வி: இளமையிலேயே அசாத்திய புத்திசாலித்தனம் கொண்ட அவர், விவிலியக் கல்வியில் சிறந்து விளங்கினார்.

  • துறவறம்: முதலில் புனித அகுஸ்தீன் சபையில் இணைந்த அவர், பின்னர் 1219-ல் தனது 24-வது வயதில் குருப்பட்டம் பெற்றார்.

2. பிரான்சிஸ்கன் சபை மாற்றமும் பெயர்க்காரணமும்

வேதசாட்சியாக மரிக்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட அவர், 1221-ல் அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் இணைந்தார். அந்தத் தருணத்திலேயே தனது பெயரையும் 'அந்தோனியார்' என்று மாற்றிக் கொண்டார். இவரது சொல்லாற்றலையும், விவிலிய அறிவையும் கண்ட திருச்சபை இவரை ஒரு சிறந்த போதகராக உலகிற்கு அடையாளம் காட்டியது.

3. மீன்களுக்குப் போதித்த விந்தை: சக்தி வாய்ந்த புதுமைகள்

புனித அந்தோனியாரின் வாழ்வில் எண்ணிலடங்காப் புதுமைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் சில வரலாற்றுச் சிறப்புமிக்கவை:

  • மீன்களின் செவிமடுத்தல்: ஒருமுறை ரீமினி நகரில் மக்கள் அவரது போதனையைக் கேட்க மறுத்தபோது, கடற்கரைக்குச் சென்று அவர் போதித்தார். அப்போது ஆயிரக்கணக்கான மீன்கள் நீரின் மேல் தலைநீட்டி அவரது போதனையைக் கேட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  • நற்கருணையை வணங்கிய கழுதை: நற்கருணையில் இயேசு இருப்பதை மறுத்த ஒரு யூதரின் கழுதை, மூன்று நாள் பசியோடு இருந்தும் தனக்கு இடப்பட்ட புல்லைத் தின்னாமல், அந்தோனியார் ஏந்திய நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்தது.

4. 13 புதுமைகளும் 14-வது அதிசயமும்

தலைமை குருவின் உத்தரவின்படி, ஒரு நாளைக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய அவருக்கு அனுமதி இருந்தது. ஒருமுறை 13 புதுமைகளை முடித்துவிட்டு அவர் சென்றபோது, கட்டடத்திலிருந்து விழுந்த ஒருவரைக் காப்பாற்ற, அவரை அந்தரத்திலேயே தொங்கவிட்டு, தலைமை குருவிடம் 14-வது புதுமைக்கு அனுமதி பெற்றுப் பின்னர் தரையிறக்கியது அவரது கீழ்ப்படிதலையும் வல்லமையையும் காட்டுகிறது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அன்னபூரணி கலாசார மண்டபம் திறப்பு ஆன்மீகப் பணிகளில் மற்றுமொரு மைல்கல்

5. அழியாத நாக்கும் புனிதர் பட்டமும்

தனது 36-வது வயதிலேயே (1231, ஜூன் 13) அந்தோனியார் இறைவனடி சேர்ந்தார். அவர் மரித்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கல்லறையைத் தோண்டியபோது, அவரது உடல் அழிந்திருந்தாலும், இறைவார்த்தையைப் போதித்த அவரது நாக்கு மட்டும் எவ்விதச் சிதைவும் இன்றி இளஞ்சிவப்பு நிறத்தில் அப்படியே இருந்தது. அந்த 'அழியாத நாக்கு' இன்றும் இத்தாலியின் பதுவை நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

6. இலங்கையில் புனித அந்தோனியார் ஆலயங்கள்

இலங்கையிலும், குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் புனித அந்தோனியாருக்குப் பல புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன:

  • தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயம்: மதங்கள் கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் தலம்.

  • பெரியகட்டு மற்றும் பள்ளங்கோட்டை திருத்தலங்கள்.

  • பாம்பு வழிகாட்டி புனித அந்தோனியார் ஆலயம்: மன்னார்-யாழ் வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயம்.

"எங்கு தேடினாலும் எதைக் கேட்டாலும் தருபவர் அந்தோனியார்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கோடி அற்புதங்கள் செய்ததால் 'கோடி அற்புதர்' என்று அழைக்கப்படும் அவர், இன்றும் தேடி வருவோரின் கவலைகளைத் தீர்த்து, நோய் நொடிகளை அகற்றும் பெரும் சக்தியாகத் திகழ்கிறார்.

நன்றி ஜெகன் ஊடகவியலாளர்,

@tamilviyugam 


COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content