Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் நறுவிலிக்குளம் மக்களின் காணி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

மன்னார் நறுவிலிக்குளம் கிராமத்து  மக் களின் காணி பிரச்சனைக்கு  வடக்கு மாகாண ஆளுநரே தீர்வை பெற்றுத் தர வேண்டும்-மக்கள் கோரிக்கை மன்னார் நானாட...

மன்னார் நறுவிலிக்குளம் கிராமத்து மக்களின் காணி பிரச்சனைக்கு  வடக்கு மாகாண ஆளுநரே தீர்வை பெற்றுத் தர வேண்டும்-மக்கள் கோரிக்கை


மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில்  பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சனைக்கு வடக்குமாகாண ஆளுநர் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோர்க்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்

இந்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள  நறுவிலிக்குளம் சித்த வைத்தியசாலைக்கு முன் பக்கமாக  உள்ள அரச காணியினை  நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்த குடம்பத்தினர்களுக்கு வழங்குமாறு பல வருடங்களாக வேண்டுகோள் விடுத்தும் எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அயல் கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த  சிலருக்கு காணி வழகள் வழங்கப்பட்டுள்ளது 

இந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகம் மாவட்டச் செயலகம் வடமாகாணம் வரை கடிதம் அனுப்பியும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லை எனவே வடக்குமாகாண ஆளுநர் அவர்களையே நாங்கள் நம்பியுள்ளோம் கொளரவ ஆளுநர் அவர்கள் இந்த காணி விடயம் தொடர்பில் தீர விசாரித்து எமது நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்து காணிகள் இல்லாமல் பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று எமது கிராமத்து மக்கள் சார்பாக இந்த வேண்டுகோளினை விடுப்பதாக  இன்று காணிக்ளஇல்லாத இளம் குடும்த்தினர் தெரிவித்தார்கள் 213

No comments