Page Nav

HIDE

Breaking News:

latest

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பொலிஸார் குவிப்பு திடீர் சோதனை நடவடிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை அறிவுறுத்...

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலியாக பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள் கண்டறியும் மெட்டல் டிடெக்டர்  மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் தமிழ்நாடு ரயில்வே போலீசார் ஆயுதம் ஏந்தி   பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் பாம்பன் பாலம் வழியாக அந்நிய நபர்கள் யாரையும் செல்ல அனுமதிக்காமல் மீனவர்கள் பாலத்தில் அமர்ந்து மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

பாம்பன் ரயில் பாலம் வழியாக வரும் ரயில்களில் படிகளில் அமர்ந்து செல்பி எடுக்கும் பயணிகளை உள்ளே செல்லுமாறும், வெளியே நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.


No comments