Page Nav

HIDE

Breaking News:

latest

கச்சதீவுக்கு பதிலாக இலங்கை வழங்கிய வாஜ்பேங் வளமிக்க கடல் பகுதி தொடர்பில் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் இந்த கச்சதீவு யாருக்கு சொந்தம் கச்சதீவை ஏன் இந்தியா இலங்கைக்கு வழங்கியது இலங்கையிடமிருந்து  கச்சதீவை மீளப்...

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் இந்த கச்சதீவு யாருக்கு சொந்தம் கச்சதீவை ஏன் இந்தியா இலங்கைக்கு வழங்கியது இலங்கையிடமிருந்து  கச்சதீவை மீளப் பெற வேண்டும்  என்னும் கருத்துகள் பலமாக எழுந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது 


கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு பின்னால் இருக்கும்  வஞ்சகம் சூழ்ச்சி பற்றி தமிழக அரசியல்வாதிகளும் தமிழக மீனவர்களும் பேசுவதில்லை  

கச்சத்தீவு ஒப்பந்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில்  செய்யப்பட்டது இந்த ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக 'வாட்ஜ் பேங்க்'  என்னும் வளமிக்க பொருளாதார மணடல கடல்  பகுதியை இந்தியா பெற்றுக்கொண்டது 

வாட்ஜ் பேங்  ஒப்பந்தம் 1976 இல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மற்றும் பின்னணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வாட்ஜ்பேங்க் என்பது இந்தியாவின் கன்னியாகுமரிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற நீர் படுகையாகும் இது மீன்வளம் மற்றும் கடல் வளம் மற்றும் எண்ணெய் வளம்  நிறைந்த ஒரு பகுதியாகும்.

1970களில் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடுகள்  நடந்துகொண்டிருந்த போது நாடுகளின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் மற்றும் கண்டத்திட்டு எல்லைகள் குறித்து விவாதம் எழுந்தது  இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லைகளில்  தெளிவான வரையறைகள் கட்டுப்பாடுகள் இல்லை   இரண்டு நாட்டு மீனவர்களும் அப்பகுதியில் உரிமை கொண்டாடி வருவதால் வாட்ஜ் பேங்க்  போன்ற வளமான பகுதிகள் எந்த நாட்டிற்குச் சொந்தமானது என்பதில் குழப்பங்கள் இருந்தன


இதற்கு தீர்வு காணும் வகையில் வளங்கள் நிறைந்த வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா பெற்றுக் கொண்டு  பரியோசனம் இல்லை என்று உணர்ந்து கொண்டதால் கச்சதீவை இலங்கைக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது  

இந்த தகவல்களானது வரலாறுகளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதால் இதன் உண்மைத் தன்மையை அறியாத    தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முதலமைச்சர்களும், எதிர் கட்சியினரும், பொது மக்களும்,  கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது எனவே இந்தியா இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என்று  வெற்றுக கோஷங்களை எழுப்பி வருகின்றார்கள்

இந்தியா தனது நாட்டின் பாதுகாப்பில் எப்பொழுதும் அக்கறையாக இருக்கும்   பிராந்திய ரீதியா மிக முக்கியத்துவம் வாய்ந்த கச்சதீவை இனாமாக வழங்க முன் வருமா? அப்படி வழங்குவதால்  சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமல்லவா என்று  ஒரு கேள்வி  எழலாம் 

இங்கு உண்மை என்னவென்றால் எப்பொழுதும் இந்தியாவின் கண்காணிப்பு வலயத்தினுள் இலங்கை இருப்பதனாலும் இந்த கடல் பகுதியில் இந்திய தமிழர்களும், இலங்கை தமிழர்களும், தொடர்ச்சியாக மீன் பிடியில் ஈடுபடுவதால்  அவ்வளவு எளிதாக கச்சதீவு உட்பட  இந்து சமுத்திர கடற்பகுதிகளில் வேறு நாடுகள் ஆக்கிரமித்து இந்தியாவை அச்சறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டதால் இந்தியாவின் பார்வையிலிருந்து  தனித்து தூரமாக இலங்கையின் கட்டுப்பாட்டில்  காலி பகுதியை அண்மித்து பொருளாதார மண்டலமான வாட்ஜ் பேங்க் பகுதியை  தனதாக்கிக் கொண்டு  இந்த கச்சதீவு பகுதியை இலங்கைக்கு கொடுத்துள்ளது  அப்போதைய இந்திரா அரசு  

இவை தொடர்பான சில ஆவணங்கள்  வெளியே வந்துள்ளதால்  இந்த ஆவணங்களை மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக  இரண்டு நாடுகளும்  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இலங்கை இந்தியா இடையில் உள்ள பாக் நீரிணை பகுதியில்  கடல் எல்லையை பிரிப்பதற்காக இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியிருந்தது  முதல் ஒப்பந்தம் 1974 செய்யப்பட்டது  இந்த ஒப்பந்தத்தில்தான் கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது   இரண்டாவது ஒப்பந்தம் 1976 மார்ச் 23ல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியை அதனுடைய எல்லையை பிரிப்பதற்கான ஒப்பந்தமாக இருந்தது 

இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளரான  கேவல் சிங்கும்  இலங்கையின் வெளியுறவுச் செயலாளரான டபிள்யு .டி ஜெயசிங்கவும் கையெழுத்திட்டதாக தெரிய வருகிறது 

அதே நேரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்  இலங்கை வெளியுறவுத்துறை செயலாளருக்கு  பல விடயங்களை உள்ளடக்கி ஒரு கடிதத்தினையும் எழுதியுள்ளார் அதில்  கன்னியாகுமரிக்கு பக்கத்தில் உள்ள இந்த வாட்ஜ் பாங்க் பகுதியில் இந்தியாவின் பிரதானமான பொருளாதார மண்டலமாக இருக்கும் அதே போல் இப்பகுதியில் உள்ள வளங்கள் மீது இந்தியாவிற்கு இறையாண்மை உண்டு என்று எழுதுகிறார் அதாவது இரு நாட்டுக்கும் சரி பங்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது  

வாட்ஜ்பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோல் எரிவாயு

அதுமட்டுமல்ல இந்த வாட்ஜ்பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோல் எரிவாயு தொடர்பான ஆராய்ச்சிகளை மேட்கொள்ள நினைத்தால் அது இலங்கைக்கு அறிவிக்கப்படும் என்று எழுதியிருந்தார் அதற்கு இலங்கை வெளியுறவுச் செயலாளரும்  பதில் கடிதம் அனுப்பியுள்ளார் இந்த ஒப்பந்தங்கள் பிரத்யேகமாக கன்னியாகுமரி கடலை அண்மித்த வாட்ஜ் பேங்க் பகுதி அதன் வளங்கள் மற்றும் முக்கியத்துவத்திற்காகவே போடப்பாட்டுள்ளது 

இந்தியாவுக்கு ஒன்றுக்கும் உதவாது என்று தெரிந்த பின் கச்சதீவை  ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு கொடுத்து விட்டு  மிகவும் வளம் பொருந்திய வாட்ஜ் பேங்க எனப்படும் பொருளாதார மண்டலத்தை இந்தியா எடுத்துக் கொண்டதுதான் வரலாற்று உண்மை 

இந்த கச்சதீவு பகுதியானது இலங்கைக்கும் வடபகுதி மீனவர்களுக்கும் சொந்தமானது என்று வடபகுதி மீனவர் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்கள் 

மேலும் இந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் உள்ள வளங்கள் பற்றி தெரிந்து கொண்டால்  தலை சுற்ற வைக்கும் இந்த வாட்ஜ்பேங்க் பகுதி என்பது கன்னியாகுமரி பகுதியில இருந்து 60 கிலோ மீடடர் தூரத்தில் அமைந்துள்ளது  கன்னியாகுமரியிலிருந்து தெற்கில் அமைந்திருக்கக்கூடிய ஒரு கண்டத்தின் முனைப்பகுதி  இந்த கடல்பகுதியானது உண்மையில் இந்தியாவின் எல்லைக்கு வெளியில் இலங்கையின் எல்லைக்குள்தான் உள்ளது இதனை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி எல்லை நிர்ணயம் செய்யும் போது உண்மை புரியும் 

இப்பகுதி இந்த கடல் பகுதியின் ஆழம் கிட்டத்தட்ட  200 மீட்டர்  என்றும் இதனுடைய பரப்பளவு சுமார் 6500 ஸ்கொயர் கிலோ மீட்டர் என்று சொல்லப்படுகிறது 

பல்லுயிர் வாழ்விடம்

இப்பகுதியில் பல்லுயிர் வாழ்விடமாக இருப்பதால் இங்கு மீன் வளங்கள் அதிகம் இங்கு மிதமான வெப்ப நிலை காணப்படுவதால் மீன் இனப் பெருக்கம் அதிகம் இந்த பகுதியில் கிட்டத்தட்ட 425 வகையான மீனினிங்கள் இருப்பதாக இந்திய ஆய்வுத் தகவல்கள்  தெரிவிக்கிறது  அதே போல் இங்கு வருடத்திற்கு 65000 மெட்ரிக் தொன் மீன்கள் பிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது 

இந்த கடல் எல்லை ஒப்பந்தத்தில் ஏமாந்து போனது இலங்கையும் இலங்கை மக்களும் தான் ஆகவே இலங்கை அரசாங்கமானது  இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து  வாட்ஜ் பேங்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சதீவோடு சேர்த்து  இலங்கைக்கு சொந்தமாக உள்ள கடல் பகுதிகளை மீட்க வேண்டும் என்பது விடயம் அறிந்த சில புத்திஜீவிகளயின் கருத்து 

இந்த கச்சதீவு பகுதியானது இலங்கை நாட்டிற்கும்  வடபகுதி மீனவர்களுக்கும் சொந்தமானது எனவே இனியாவது தமிழக அரசியல்வாதிகளும் மீனவர்களும் கச்சதீவு தொடர்பில் கேள்வி எழுப்புவதை நிறுத்தி  இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் 

No comments