Page Nav

HIDE

Breaking News:

latest

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக மன்னார் வாசிகள் உட்பட ஐம்பது நபர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த நபர்கள் உட்பட ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து  13 டிங்கி பட...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த நபர்கள் உட்பட ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து  13 டிங்கி படகுகள் 01 பாரம்பரிய படகு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் (01) ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டது 

இந்த நடவடிக்கையானது கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை தீவு முழுவதும் பல டங்களில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனியான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மன்னாரில் பள்ளிமுனை, அம்பாறை, அட்டாளைச்சேனை, கொக்கிளாய், போல்டர் முனை,  இறக்கக்கண்டி லங்காபடுன வாகரை, ஜெயா நகர், கிண்ணியா, திருகோணமலை, காலி நீர்கொழும்பு,  பலப்பிட்டி, அம்பலாங்கொடை  போன்ற  பகுதிகளை சேர்ந்தவர்களாவார்கள் 

இந்த நபர்கள் அங்கீகரிக்கப்படாத வலைகள் மூலம் மீன்பிடித்தல் வெடிமருந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மீன்பிடி படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார்,திருகோணமலை,நீர்கொழும்பு ஈச்சலம்பற்று, முல்லைத்தீவு, குச்சவெளி, வாழைச்சேனை, காலி, கிண்ணியா கல்முனை, மற்றும் மண்முனை ஆகிய கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடது 

No comments