Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் நகர பகுதி கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

மன்னார் நகர பகுதியில்  கிராமங்களுக்குள் உள்ள வீடுகளுக்குள்  கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்...

மன்னார் நகர பகுதியில்  கிராமங்களுக்குள் உள்ள வீடுகளுக்குள்  கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள் 

இந்த சம்பவம் ஆனது நேற்றைய தினம் 11ம் தேதியில் இருந்து மன்னார் உப்புக்குளம், சௌத்பார், பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி,  ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது 

இதன் காரணமாக கைக்குழந்தைகள், நோயாளிகள், வயோதிகர்கள், உள்ள குடும்பத்தினர் மிகவும் பாதிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் 

மன்னாரில் ஒழுங்கான மழை வீழ்ச்சி பதிவாகாத இந்த நிலையில் கடல் நீர் வீடுகளுக்குள் செல்கிறது என்றால் நல்ல மழை வீழ்ச்சி பதிவாகும்போது அல்லது சாதாரன இயற்கை அனர்த்தம் ஒன்று  ஏற்படும் போது மன்னார் நகருக்குள் உள்ள மக்கள் எவ்வாறான பாதிப்புகளை மேற்கொள்ள கூடும் என்று அப்பகுதி மக்கள் பெரும்  அச்சத்தில் இருக்கின்றார்கள்

எனவே  உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து இவற்றிற்கான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் 


No comments