மன்னார் விடத்தல்தீவு கடலின் ஆழமில்லாத பகுதிகளில் பெருமளவிலான டொல்பின் மீன்கள் கரை ஒதுங்கி வருகிறது பலரும் அதனை பிடித்து விளையாடி மகிழவதை க...
மன்னார் விடத்தல்தீவு கடலின் ஆழமில்லாத பகுதிகளில் பெருமளவிலான டொல்பின் மீன்கள் கரை ஒதுங்கி வருகிறது பலரும் அதனை பிடித்து விளையாடி மகிழவதை காணக் கூடியதாக உள்ளது
இவ்வாறு ஆழமில்லாத மன்னார் கடல்கரையோரங்களில் கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கும் செயற்பாடானது இயற்கை அனர்த்தம் அல்லது கடல் பகுதியில் சுனாமி போன்ற அச்சத்தல்கள் எழ வாய்ப்புகள் உள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்
ஏனெனில் கடந்த 2004 ம் ஆண்டு காலப் பகுதியில் இவ்வாறு மன்னாரின் வட கடல் தென்கடல் பகுதியில் டொல்பின்கள் கடல் பசுஇ கடல் பாம்புகள்இ இன்னும் பலவிதமான கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியிருந்தது அவதானிக்கப்பட்டும் இவை தொடர்பான எந்த முன்னறிவும் இல்லாதபடியால் அந்த சம்பவம் கணக்கில் எடுக்கப்படாமல் இருந்து சில நாட்களின் பின்னர் சுனாமி தாக்கம் நிகழ்ந்தது
அன்றைய சுனாமி ஒன்று நிகழ்வதை முன் கூட்டி அறிந்து இவ்வாறான கடல் வாழ் உயிரினங்கள் எச்சரிக்கை விடுத்ததா என்று எவருக்கம் தெரிய வில்லை
ஆனால் இன்று மன்னார் கடல் பகுதியில் இவ்வாறு டொல்பின்கள் கரை ஒதுங்குவது ஏதேனும் சுனாமி போன்ற அனர்த்தத்தின் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்று அனுபவம் வாய்ந்த பலர் தெரிவிக்கின்றார்கள் இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த அறிக்கையும் விடவில்லை என்றாலும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்



No comments