1.ஆண் பெண் இருவரும் தங்களுடைய தகுதிக்கு மீறிய ஒரு வாழ்க்கைத் துணையை தேடும் மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள் 2.அழகிலோ அல்லது வசதியிலோ உங்களை ...
1.ஆண் பெண் இருவரும் தங்களுடைய தகுதிக்கு மீறிய ஒரு வாழ்க்கைத் துணையை தேடும் மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்
2.அழகிலோ அல்லது வசதியிலோ உங்களை விட தகுதிக்கு மீறிய நபர்களை தேர்ந்தெடுக்கும் போது உங்களை அடக்கி ஆளும் நிலைக்கு உள்ளாகுவீர்கள் இதனால் உங்கள் எதிர்கால கனவுகள் ஏமாற்றத்தை தரக் கூடும்
3.விட்டுக்கொடுத்தல் மற்றும் அனுசரித்து போகுதல்: விட்டுக்கொடுப்பதும் அனுசரித்து போவதும் சவாலான நேரங்களில் ஒருவரையொருவர் ஆதரிப்பதும் மிகவும் முக்கியம். இது உறவை பலப்படுத்தும்.
4.நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைத்தால் எதிர்த் தரப்பினர் பார்வையில் அவர்கள் சொல்வதுதான் சரி என்றாகிவிடும் ஆகவே விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இருங்கள்
5.தனிப்பட்ட இடத்திற்கு மதிப்பளித்தல்: உங்கள் இருவருக்கும் தனிப்பட்ட பொழுதுபோக்கு விருப்பங்கள் மற்றும் சுதந்திரம் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடத்திற்கு மதிப்பளிப்பது உறவின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
6. இருவரில் எவராவது ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சமரசம் செய்யாமல் உங்கள் பிரச்சனைகள் தீரப் போவதில்லை
7.அன்பை வெளிப்படுத்துதல்: அன்பை வெளிப்படுத்துவது பாராட்டுவது சிறிய விஷயங்களில் கூட அக்கறை காட்டுவது உறவின் நெருக்கத்தை அதிகரிக்கும்.
நிதி மேலாண்மை: திருமணம் செய்துகொண்ட பிறகுஇ நிதி முடிவுகளை இருவரும் சேர்ந்து எடுப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் பணத்தை எப்படி செலவழிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து கலந்துரையாடி ஒரு பொதுவான முடிவுக்கு வர வேண்டும்.
8.உங்கள் அயலில் உள்ள குடும்பத்தில் ஏன் பிரச்சனை வந்தது பிரிந்து சென்றார்கள் அல்லது பிரச்சனையோடு வாழ்கிறார்கள் அல்லது வேறு ஏதோ ஒரு குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லாமல் அன்யோன்யமாக வாழ்கிறார்கள் இதற்கான காரங்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து பாடத்தை கற்றக் கொண்டு உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள்
9.புரிதல் மற்றும் நம்பிக்கை: ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும் வெளிப்படையாகப் பேசுவதும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைப்பதும் மிகவும் முக்கியம். இது ஒரு நல்ல உறவுக்கு அடித்தளமாக அமையும்.
10.பிற மனிதர்கள் மற்றும் உங்களின் உறவுகளின் முன்னால் உங்கள் வாழ்க்கைத்துணையை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள் இன்ப துன்பங்கள் அனைத்து நேரங்களிலும் அவர்களுக்கு பக்க பலமாக இருங்கள்
11.முரண்பாடுகள் வந்துவிட்டால் உடனடியாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பேசிக் கொள்வதற்கு காலதாமதமாகாதீர்கள் சிறு இடைவெளி பின்னர் நிரந்தரமான இடைவெளியை தந்துவிடும்
12இடைவெளியை உண்டாக்கிவிடும் முடிந்தவரை உங்கள் குடும்ப பிரச்சனைகளை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

.jpg)
No comments