ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 20 மெகாவாட் கொள்ளளவுடைய காற்றாலை மின் நிலையம் திறந்து வைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமை தாங்கி, நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து இந்த நவீன மின்நிலையத்தைப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து வைத்தார்.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
நாட்டின் வரலாற்றில் முதல்முறை: மெகா விசையாழிகள் (Turbines)
இந்தத் திட்டம் இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது:
மாபெரும் விசையாழிகள்: ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ திட்டத்தின் கீழ், தலா 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 04 பிரம்மாண்டமான காற்று விசையாழிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதுவே இலங்கையில் ஒரு விசையாழி மூலம் உற்பத்தி செய்யப்படும் மிகக்கூடிய மின்சாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு நிறுவனத்தின் சாதனை: வெளியேறாத செலாவணி
CEYLEX Renewables எனும் உள்நாட்டு நிறுவனம் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிடைத்துள்ள பொருளாதார நன்மைகள்:
செலாவணி மிதிப்பு: வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்ல வேண்டிய பாரிய நிதி நாட்டுக்குள்ளேயே தக்கவைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வலுவூட்டல்: உள்நாட்டுப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்
ஜனாதிபதியுடன் இணைந்து விசையாழிகளை இயக்கி வைக்கும் நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார, நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார மற்றும் CEYLEX Renewables நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர கணேகொட உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
@tamilviyugam
COMMENTS