இந்திய அரசின் மீது இலங்கை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் விசனம்
மன்னாரில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இக்கருத்துக்களை முன்வைத்தார். அவர் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் பின்வருமாறு:
தமிழக முதலமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள கேள்வி
"இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் போதெல்லாம், தமிழக முதலமைச்சர் உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அவர்களை விடுவிக்கக் கோருகிறார். ஆனால், ஒருமுறை கூடத் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என அவர் அறிவுறுத்தியதில்லை" என ஆலம் தெரிவித்தார்.
இளைஞர் கைது! போதைப் பொருளின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழியும் எதிர்காலம்.
அரசியல் நோக்கம்: தமிழகத்தின் எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தியே இத்தகைய நடவடிக்கைகள் அமைகின்றனவா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரடி வேண்டுகோள்: "தயவுசெய்து இலங்கை கடற்பரப்பிற்குள் வராதீர்கள்; தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தாதீர்கள். இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது" எனத் தமிழக மீனவர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
கேரளக் கப்பல் விபத்து: எங்கே போனது மீனவர்களுக்கான இழப்பீடு?
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரளக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாகவும் அவர் அதிரடியான தகவல்களை வெளியிட்டார்:
கடல் மாசு: விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து விழுந்த 643 கொள்கலன்களில் 55 கொள்கலன்கள் பிளாஸ்டிக் துகள்களையும், ஏனையவை ஆபத்தான இரசாயனங்களையும் கொண்டிருந்தன. இதனால் வடபகுதி கடல் சூழல் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை முறையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
காணாமல் போன இழப்பீடு: இந்தக் கப்பல் விபத்திற்காக இலங்கை அரசு முதற்கட்ட இழப்பீட்டைப் பெற்றுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களுக்கு இதில் ஒரு ரூபாய் கூடப் போய்ச் சேரவில்லை.
அதிகாரிகளுக்குச் சவால்: தற்போது இரண்டாம் கட்ட இழப்பீட்டிற்கு அரசு தயாராகி வரும் நிலையில், முதற்கட்ட நிதிக்கே கணக்கு இல்லை. இது தொடர்பாக வடபகுதி மக்கள் பிரதிநிதிகளும் மீனவ அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாதிப்புக்குள்ளாகும் கடல் வாழ் உயிரினங்கள்
இரசாயனக் கசிவு காரணமாகக் கடல் பசுக்கள், திமிங்கலங்கள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு எதிர்காலத்தில் மீன்வளத்தை முற்றாக அழித்துவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
@tamilviyugam

COMMENTS