மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு.

மன்னார் மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
65 வழிபாட்டுத் தலங்களுக்கு நிவாரணம்
அனர்த்தங்களினால் சேதமடைந்ததாக அடையாளங்காணப்பட்ட பல்வேறு மதத் தலங்களுக்கு முதற்கட்டமாக தலா 25,000 ரூபாய் வீதம் நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதன் விபரங்கள் பின்வருமாறு:
இந்து ஆலயங்கள்: 42
கிறிஸ்தவ ஆலயங்கள்: 17
பள்ளிவாசல்கள்: 06
இதன் மூலம் மொத்தமாக 65 வழிபாட்டுத் தலங்கள் இந்த முதற்கட்ட நிதியுதவியைப் பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்டத்திலுள்ள மூன்று பௌத்த விகாரைகளுக்கும் நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஏற்பாட்டில் 'மாகாண சபை முறைமையும் அதிகாரப்பகிர்வும்' விஷேட கருத்தமர்வு.
நிர்வாக அதிகாரிகளின் பங்கேற்பு
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் அந்தந்த மதத் தலங்களின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டு இந்த காசோலைகளைப் பெற்றுக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட கட்டடங்களை விரைவாகப் புனரமைத்து, மக்களின் வழிபாட்டுத் தேவைகளைச் சீர்செய்ய இந்த நிதி பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@tamilviyugam
COMMENTS