மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் கசிப்பு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனால்...
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் கசிப்பு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மடு பெரியபண்டிவிரிச்சான் மேற்கு பகுதியில் வசிக்கும் இளைஞர்களால் பெரியபண்டிவிரிச்சானில் கசிப்பு உற்பத்தி செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கசிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இளைஞர்களின் குறித்த செயல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
No comments