இது தாராபுரம் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமத்தில் காணப்படும் குளம் ஒன்றனை ஆதாரமாக கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பூங...
இது தாராபுரம் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமத்தில் காணப்படும் குளம் ஒன்றனை ஆதாரமாக கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பூங்காவானது சுற்றுலாவிகளை கவர்ந்து வருகிறது
வரலாறு ரீதியாக இந்த தாராபுரம் மிகப் பழங்காலந் தொட்டு பிரசித்தி பெற்ற வியாபாரத் தளம் அராபியர்கள் உட்பட பல நாட்டு வணிகர்கள் இப்பகுதியில் குவிந்தே காணப்படுவார்கள்
மின்னும் ரத்தின கற்கள் உட்பட பல வியாபார நடவடிக்கைகள் இங்கு நடைபெறும் மன்னார் துறைமுக செயற்பாடுகள் நிறுத்தப்படும் வரை இது ஒரு தூங்கா நகரமாகவே இருந்துள்ளது
இந்த தாராபுரமும் முன்னாளில் ஆற்றுவாயை அண்டிய பிரதேசமாக இருந்து ஏற்பட்ட கடற்கோள் இயற்கை பேரழிவுகளால் அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டுள்ளது இன்றும் இஸ்லாமிய மக்கள் இப்பகுதியில் செரிந்து வாழ்கிறார்கள்
சொல்லப் போனால் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மிகவும் அழகாக காணப்படுவது இந்த தாராபுரம் பூங்கா என்று பலரம் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்


No comments