வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பரவலாக்கம் தொடர்பில் ரவிகரன் எம்.பி முக்கிய கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியர் வளப் பரவலாக்கம் காரணமாக, வன்னிப் பிராந்திய மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இதனை விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்/20/02/2026,
கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரின் பதில்
பாராளுமன்றக் குழு அறையில் இன்று (20.02.2026) நடைபெற்ற கல்வி மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக இந்த ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் சமச்சீரற்ற நிலையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நாடு முழுவதும் க.பொ.த சாதாரண இன்று பரீட்சை இன்று ஆரம்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த தரவுகளின்படி, வடமாகாணத்தில் இந்து நாகரீகப் பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை கவலைக்கிடமாக உள்ளது:
மொத்தத் தேவை: மாகாண மட்டத்தில் 125 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 93 ஆசிரியர்கள் (75%) மட்டுமே உள்ளனர்.
மாவட்ட ரீதியான வேறுபாடு: யாழ்ப்பாணத்தில் 89% ஆசிரியர்கள் உள்ள நிலையில், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் வெறும் 50% ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 64% ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சங்கீதப் பாடத்தில் நிலவும் முரண்பாடு
கர்நாடக சங்கீதப் பாடத்தைப் பொறுத்தவரை, மாகாண ரீதியாக ஆசிரியர்கள் மிகையாக இருந்தாலும், பரவலாக்கத்தில் பெரும் அநீதி இழைக்கப்படுவதாக ரவிகரன் சுட்டிக்காட்டினார்:
யாழ்ப்பாணம்: இங்கு தேவைக்கும் அதிகமாக 81 ஆசிரியர்கள் (132%) மேலதிகமாக உள்ளனர்.
வன்னிப் பிராந்தியம்: வன்னியில் உள்ள 6 கல்வி வலயங்களில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
மாவட்ட புள்ளிவிபரம்: கிளிநொச்சியில் 92%, மன்னாரில் 72%, வவுனியாவில் 60% மற்றும் முல்லைத்தீவில் 85% ஆசிரியர்களே உள்ளனர்.
தீர்வும் கோரிக்கையும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 கர்நாடக சங்கீத ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், அங்கு தகுதியுள்ள 16 பட்டதாரிகள் வேலையின்றி இருப்பதை ரவிகரன் சுட்டிக்காட்டினார். புதிய ஆட்சேர்ப்பின் போது அந்தந்த மாவட்ட பட்டதாரிகளைக் கொண்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என அவர் வலியுறுத்தினார்.
சில நிர்வாகக் குறைபாடுகளே இந்தச் சமச்சீரற்ற நிலைக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆளுநரின் தலையீட்டின் மூலம் வன்னி மாவட்ட மாணவர்களுக்கான கல்வி நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெகன் ஊடகவியலாளர்,0774084745,tamilviyugam12@gmail.com

COMMENTS