மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி , கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி-அனைத்து தரப்பினரையும் கலந்து ...
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி , கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி-அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது
வறுமையிலும் விளையாட்டில் சாதனை படைக்கும் மன்னார் மாணவி
அணி திரளுங்கள்
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும்,குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும்,குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
மக்களின் வாழ்வாதாரம்
நில அபகரிப்பு பிரச்சினை வெறும் சொத்துரிமைக்கு அப்பாற்பட்டது; இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைத் தொடுகிறது. நிலம் பரவலாகக் கைப்பற்றப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்
வறுமையிலும் விளையாட்டில் சாதனை படைக்கும் மன்னார் மாணவி
மன்னார் மாவட்டத்தில் பல குடும்பங்கள் தமது காணிகளை பறிகொடுத்துள்ளனர் அவ்வாறு பறிகொடுத்த அவர்களது காணிகளுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை இது அநீதியின் உச்சமாகும் என்கிறார் மன்னார் பிரஜைகள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தந்தை மர்கஸ் அடிகளார்
அவசரத் தேவை
மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தலையிட்டு தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளார். ஒரு தீர்மானத்திற்கான அழைப்பு நிலத்தை மீட்டெடுப்பது மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதாகும்.
பல வருடங்களாக தொடரும் கனிய மணல் அகழ்வு
மன்னாரில் தாது மணல் அகழ்வு தொடர்பான சர்ச்சை புதியதல்ல. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்கள் மாவட்டத்தில் செயல்பாடுகளை நிறுவ ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் கனிமப் பிரித்தெடுப்பின் இலாபகரமான வாய்ப்புகளால் உந்தப்பட்டு உள்ளூர் மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பை மீறி செயற்படுத்தி வருகின்றனர்
இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் முக்கியமான தகவல்கள்
மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் காணியற்றவர்களாக இருப்பதன் மூலம் மன்னாரில் காணி பிரச்சினை மேலும் பல சிக்கல்களை உருவிக்கியுள்ளது. மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது நிலம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காததால் மக்கள் மிகவும் விரக்தி நிலையில் உள்ளார்கள்
தொழில் முயற்சியாளர்கள் நிலமை
சிறுதொழில் தொடங்குவதற்கு 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிலம் கோரி விண்ணப்பித்த போதிலும் அவர்களின் விண்ணப்பங்களுக்கு எவ்வித பதில்களும் இல்லை நிலம் தேவைப்படுபவர்களுக்கு வழங்காமல் வெளிநாட்டில் இருந்து திரும்பும் தனிநபர்கள் செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் உள்ளவர்களுக்கே நிலம் ஒதுக்கப்படுகிறது என்ற கவலைக்குரிய குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைக்கிறார்கள்
இந்த பாரபட்ச செயற்பாடு அதிகாரிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான பிளவை ஆழமாக்கி அதிகாரிகள் மீது அவநம்பிக்கை மற்றும் வெறுப்புணர்வை தூண்டுவதாக உள்ளது
பிரதேச வாரியாக
மாந்தை மேற்கு நானாட்டான் முசலி மடு போன்ற பகுதிகளில் பாரியளவில் பயன்படுத்தப்படாத காணிகள் காணப்படுவதனால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. பாழடைந்து விடப்பட்ட இந்த நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பு இனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தரிசு நிலங்களாக மாறியுள்ளன.
மன்னாரில் காடழிப்பு
மன்னார் மாவட்டத்தில் காடழிப்புச் செயற்பாடுகள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து அண்மையில் வெளிவந்துள்ள தகவல் அடிப்படையில் ஆத்தி மோட்டை பிரதேசத்தில் 30 ஏக்கர் காப்புக்காணி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுகர குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட மேய்ச்சல் நிலங்களும் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைமுக ஆதரவு
இந்த காடழிப்புகள் யாவும் சம்பந்தப்பட்ட துறைகளின் மறைமுக அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டதாகத் தோன்றுகிறது என்பதுடன் இந்த நடவடிக்கைகள் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நிலப் பயன்பாட்டுச் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்காதது உள்ளூர் மக்களின் விரக்தியை அதிகரிக்கச் செய்துள்ளது
இது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகமும் தனது விமர்சனங்களை தெரிவித்துள்ளது குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது
ஏற்பாட்டுக் குழுவினர்
எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள் ,மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் முக்கியமான தகவல்கள்
காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும்.
ஜனாதிபதிக்கு மகஜர்
அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும்.எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள்,வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments