இந்திய அரசும் மக்களும் இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள்-மன்னாரில் சாய் முரளி தெரிவிப்பு.
மன்னார்: இலங்கை மக்களுக்கும் இந்தியாவிற்குமான உறவு என்றும் பிரிக்க முடியாதது என்பதையும், இக்கட்டான சூழலில் இந்திய அரசு என்றும் துணை நிற்கும் என்பதையும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் வியூகம், மன்னார், செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் அண்மைய புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெற்றது..jpeg)
மன்னார் மீனவர்களுக்கு முதற்கட்ட நிவாரணம்
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பல உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
நிகழ்வில் உரையாற்றிய இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்த முக்கிய விடயங்கள்:
பாரிய உதவித் திட்டம்: நவம்பர் 28 ஆம் திகதி முதல் இதுவரை சுமார் 1700 மெற்றிக் டன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை: இயற்கை அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்திய மக்களின் இந்த மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்துள்ளோம்.
அடுத்த கட்டமாக படகுகள் மற்றும் இயந்திரங்கள்!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்:
"தற்போது வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் ஒரு ஆரம்பம் மட்டுமே. அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி வலைகள், புதிய படகுகள் மற்றும் வெளி இணைப்பு இயந்திரங்கள் (Outboard Motors) ஆகியவற்றை வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உதவிகள் மிக விரைவில் மன்னார் மீனவர்களுக்குக் கிடைக்கப்பெறும்."
உறவின் பலம்
இந்திய அரசாங்கம், இந்திய மக்கள் மற்றும் இந்திய தூதரகம் ஆகிய முத்தரப்பும் இலங்கை மக்களுடன் எப்போதும் ஒரு குடும்பமாகத் துணை நிற்கும் என அவர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு இந்திய அரசுக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
@tamilviyugam
COMMENTS