TAMILVIYUGAM.COM, WORLD NEWS, 27/8/2026 பேரழிவில் குறைந்த மனிதாபிமானம்: நேபாள எல்லை வெள்ளத்தில் 332 உயிர்கள் பலி; 384 சுற்றுலா பயணிகள் மாயம...
TAMILVIYUGAM.COM, WORLD NEWS, 27/8/2026
பேரழிவில் குறைந்த மனிதாபிமானம்: நேபாள எல்லை வெள்ளத்தில் 332 உயிர்கள் பலி; 384 சுற்றுலா பயணிகள் மாயம்
காத்மாண்டு:
நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்த பொடே கோஷி (Bhote Koshi) ஆற்றுப் பகுதியில் திடீரென ஏற்பட்ட கொடூர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக அப்பகுதியே tamilviyugam உருக்குலைந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று காலை ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 100 பேர் சீன நாட்டவர்கள் என்பதைச் சீன வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திபெத் பகுதியிலும் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளதுடன், 3 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
சுற்றுலா வாரியம் வெளியிட்ட பட்டியல்: 384 சுற்றுலா பயணிகள் மாயம்
நேபாள சுற்றுலா வாரியம் (Nepal Tourism Board - NTB) ஆகஸ்ட் 26 அன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி (Situation Update-2), வெள்ளத்தில் சிக்கி மாயமான 384 சுற்றுலாப் பயணிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுத் தேடப்பட்டு வருகின்றன.
மொத்தமாக மாயமான பயணிகள்: 384 பேர்
வெளிநாட்டு பயணிகள்: 291 பேர்
இந்தியர்கள்: 105 பேர் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் 37 பேர் உட்பட)
நேபாள நாட்டவர்கள்: 93 பேர்
முக்கிய சுற்றுலா முகமைகள் வழியே மாயமானோர் விபரம்:
Samrat Tours & Travels: 71 பயணிகள் (59 இந்தியர்கள்)
Kathmandu Holiday Tours & Travels: 17 பயணிகள் (ஆஸ்திரேலியா 1, நெதர்லாந்து 1, நேபாளிகள் 15)
Leaf Holiday: 55 பயணிகள் (46 இந்தியர்கள்)
Trekkers Society: 92 பயணிகள் (77 வெளிநாட்டவர்கள்)
Fishtail Tours & Travels: 27 பயணிகள் (3 அமெரிக்கா, 17 மலேசியா)
Himalayan Glacier: 52 பயணிகள் (37 NRI பயணிகள்)
Alpine Eco Trek: 20 பயணிகள் (12 பிரிட்டன், 4 தென்னாப்பிரிக்கா)
நேபாள சுற்றுலா வாரியம் மாயமான Tamilvyugam பயணிகளைக் கண்டுபிடிக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர உதவிக்கு 1234, 1144 மற்றும் சுற்றுலா பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
பேரழிவிலும் அரங்கேறும் மனிதாபிமானமற்ற கொடூரம்!
இயற்கை சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்து தவிக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், சில சமூக விரோதிகள் காட்டும் மனிதாபிமானமற்ற நடந்து கொள்ளல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலங்களில் நகைகள் திருட்டு: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்களின் உடல்களில் இருக்கும் தங்க நகைகள் மற்றும் அணிகலன்களைக் களவாடும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் கொள்ளை: பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வீதிகளில் அடித்து வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (Gas Cylinders), தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் (Refrigerators), பாத்திரங்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் உபகரணங்களைச் சிலர் களவாடிச் செல்லும் அவலம் பதிவாகியுள்ளது.
மீட்புப் பணிகளில் கடும் சவால்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை, கரடுமுரடான மலைப் பகுதி புவியியல் அமைப்பு மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களை அடைவதில் பெரும் சிரமம் நிலவுகிறது. நேபாள இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் களத்தில் இறங்கித் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தொலைத்தொடர்பு மற்றும் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு மற்றும் மாயமானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
@tamilviyugam


COMMENTS